லலிதா செல்வாம்பிகை கோவிலில் வைகாசி சிறப்பு ஹோமம்!
ADDED :3779 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நேற்று முன்தினம் வைகாசி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு 10 மணிக்கு லலிதா செல்வாம்பிகை சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கன்னியப்பன் மற்றும் அறங்காவலர்கள் விழா குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வரன் சிவன் செய்தார்.