உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொயனப்பாடிகோவில் தேர்த் திருவிழா!

பொயனப்பாடிகோவில் தேர்த் திருவிழா!

சிறுபாக்கம்: பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த்  திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  அன்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு  சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (4ம் தேதி) தேர்த் திருவிழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு அலங்கரித்த திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந் தது. ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்களுர், மலையனுõர், விநாயகநந்தல், கச்சிமயிலூர், பாசார்,  காஞ்சிராங்குளம், அடரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !