கோ.பூவனூரில் செடல் திருவிழா!
ADDED :3776 days ago
மங்கலம்பேட்டை: கோ.பூவனூர் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில்
ஏராளமானோர் செடலணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மங்கலம்பேட்டைஅடுத்த கோ.பூவனூர் முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னை நடந்தது. பகல் 1:00 மணிக்கு ஏராளமானோர் செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.