பெற்றோருக்கு சேவை!
ADDED :3939 days ago
ஜிகாத் புனிதப்போரில் ஈடுபட ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம் அனுமதி கேட்டார்.நாயகம் அவரிடம், உமது பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா? என்று கேட்டார்.பெற்றோர் இருக்கிறார்கள் என்று அவர் சொல்லவே, அப்படியானால், நீர் உம் பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து வாரும், என்றார்கள்.பெற்றவர்களுக்கு செய்யும் சேவை மிக உயர்ந்தது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார்.