சிவலோக நாதர் கோவிலில் அஷ்டமி பூஜை!
ADDED :3770 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோக நாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிேஷக பூஜைகள் நடந்தன. இக்கோவிலில், நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு மாலை, 5.00 மணியளவில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது.பின், கால பைரவருக்கு, எலுமிச்சை, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை தீபம் போன்றவைகளில் விளக்கு வைத்து வழிபட்டனர்.