உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்!

விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்!

விருத்தாசலம்: பேரளையூர் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த பேரளையூர் வரதராஜபெருமாள் கோவிலில், கடந்த மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு மேல்ஸ்ரீதேவிபூதேவிசமேதவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:30 மணிக்குஅனுமன் பெருமைதலைப்பில் உபன்யாசம், 6:30க்கு தேர்த்தட்டு வார்த்தை, லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி, 8:30 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி, 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !