கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா
ADDED :3748 days ago
திருத்தணி: ஊராட்சியில் நடந்த ஜாத்திரை விழாவில், உற்சவர் கங்கையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர், மோட்டூர் கிராமத்தில், நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு, கிராம தேவதையான எல்லையம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தன. இரவு 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தன.