உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரியை வழிபாடு

கிரியை வழிபாடு

சுருதியா கமமுறையின் மஞ்சன நிவேதனம்
சுடர்தூப வாடை வாசம்
சூழுமல ராதிகொடு நற்பூசை யாற்றுவர்கள்
தோன்று புண்ணிய பாவமும்
புரையற வுணர்ந்துரைசெய் வார்மறைகள் ஆகம
புராணமுதல் நூலு ணர்ந்தே
பொங்குபல வுயிர்வதை செயார்வேள்வி யாற்றுவார்
புகழ்பெறுங் கிரியை நெறியோர்
உரைசெய்வர் தருமார்த்த காமாதி யின்பவகை
உரகத் தடைந்து வானத்(து)
உருவசி யரம்பையர்தம் இன்புற்று நமதருகில்
உறுவரென மறைபு கன்றாய்
திரைகடற் புவிபரவு சரியைகிரி யாயோக
சித்தியொடு முத்தி யுதவும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !