உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயங்களில் செய்யத் தகாதவை!

சிவாலயங்களில் செய்யத் தகாதவை!

ஒருவல நமத்காரம் எச்சில்கான் றுமிழ்தலங்(கு)
உறுசூத கத்தின் வருதல்
ஓமம்செ பம்புரிதல் கெற்பநற் கிரகமதில்
உயர்ப தம்கழு வாதுறல்
பரிகரிகண் முதலூர்தி மீதுதிரு முன்புறுதல்
பாகிலைய ருந்தல் சயனம்
பலகாரம் ஓதனாதி களுணல்இ லிங்கவிடை
பலிபீ டநடு வேசெலல்
தருமங்க தாடனம் பொய்கர்தல் ஆசியம்
சாற்றல் அழுதிட லபானந்
தங்குவா யுவைவிடுதல் கஞ்சுகா திகள்அணிதல்
தாரம்ப ரத்தை முதலாந்
தெரிவைய ருடன்கலந் துரையாடல் முதலான
தீங்கா லயக் குற்றமாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

அகமமதை கொண்டவராம் யாவர்க்கும் ஈதல்விறல்
அதிகாரம் ஆக்கி னைசெயல்
அங்ககஞ் சுகிமாக்கள் புடைசூழ வருதல்பிறர்
ஆசிரிய வந்த னைசெயல்
மிகவுநர ரைப்புகழ்தல் பரநிந்தை குருநிந்தை
விண்டுபுகழ் ஓதல் கோயில்
மேம்பொருள் கவர்ந்திடுதல் கோமுகை கடந்திடுதல்
விடையினொடு பலிகொள் பீடம்
சிகரிதிரு மேனிகடல் ஐந்தினிழல் படிதல்தன்
தேகநிழல் ஆங்கு படிதல்
சிக்குமல சலசுத்தி யின்றியுறல் தயிலாதி
தேய்த்து றல்அகா லத்துறல்
செகநடுங் குறும்இந்த நாலெட்டும் அன்றியும்
செப்பில்இனம் உளந வைகளாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !