ஓம் சக்தி நாராயணி பீடத்தில் திருவாசகம் படிக்கும் விழா
ADDED :3747 days ago
வேலூர்:வேலூர் அடுத்த, திருமலைக்கோடி, ஓம் சக்தி நாராயணி பீடத்தில், திருவாசகம் படிக்கும் முற்றோதல் பெருந்திருவிழா நேற்று நடந்தது. சக்தி அம்மா துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் சதாசிவ பரம்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், சிவ தாமோதரன் தலைமையில், 10 ஆயிரம் சிவனடியார்கள் திருவாசகத்தை படித்தனர்.