மெய்யாள வந்த கருப்பன்
ஆயனெனும் பேர்படைத்து ஆய்ப்பாடி நந்தன்மனை
மாயனெனும் சோதை மகனாய் வளர்ந்தோனே
நேயமுடன் என்னாளும் நீள்நிலத்தோர் கொண்டாட
ஞாயிறன்று நீர்வருவீர் நல்ல கருப்பையாவே.
சிங்கைநகர் அங்காளி தேவி திருவாசலுக்கு
துங்கனென அன்று வந்த சுவாமிதள நாயகமே
எங்களுட பங்கிலிருந்து என்றும் சந்தானமருள
திங்களன்று நீர்வருவீர் திவ்ய கருப்பையாவே
பொய்வாக் குரைத்துப் பிடித்தாடும் பேய்கள் தன்னை
கைவாள்க் இறைகொடுக்கும் காயாம்பு மேகவர்ணா
மெய்வாக்காய் செல்வம் விளங்கும் சந்தானமருள
செவ்வாய்க்கு நீர்வருவீர் செல்வ கருப்பையாவே
பதகமலம்தான் பணியும் பக்தர் தமக்குரிய
சுதனருள வேணுமையா சுவாமி தளநாயகமே
பதனமுடன் எங்களுக்கு பக்திமுக்தி தந்தருள
புதனன்று நீர்வருவீர் புண்ய கருப்பையாவே
பேய்களுடன் பில்லி பிடித்தாடும் சூனியத்தை
ஆயனெனப் போய்த்தூரத்தி அஞ்சாமல் நீ காப்பாய்
தூயமறைப் பொருளின் சுருதிமொழி நீயருள
வியாழனன்று நீர் வருவீர் வேளை கருப்பையாவே.
துள்ளிய மானிடரைத் தொடர்ந்தாடும் பேய்கள் தன்னை
அள்ளிநெற்றி மயிர்பிடித்து அழிஞ்சிமரத் தாணிதைத்து
புள்ளிபடா நீ றணிந்து புத்திரபாக்கியம் அருள்
வெள்ளியன்று நீர் வருவீர் வீர கருப்பையாவே
முனிவர் தபோதனர்கள் முன்னின்று போற்றிசெய்
கனிவாய் வரம் கொடுக்கும் காயாம்பு மேகவர்ணா
பனிவாய் வணங்கிடும் உன்பக்தர்களை காத்தருள
சனிவாரம் நீர்வருவீர் சுவாமி கருப்பையாவே.