உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு பாலசுப்ரமணிய சுவாமி சன்னதியில் ஆடி கிருத்திகை!

பெங்களூரு பாலசுப்ரமணிய சுவாமி சன்னதியில் ஆடி கிருத்திகை!

பெங்களூரு: பெங்களூரு டி.சி.எம்., ராயன் ரோடு, வேல்முருகபுரம் பாலசுப்ரமணிய சுவாமி சன்னதியில், இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.கடந்த, 77 ஆண்டுகளுக்கு முன், மைசூரு அரசிடமிருந்து, பெங்களூரு நகரில், டாக்டர் டி.சி.எம்., ராயன் ரோடு அருகிலுள்ள காலி இடத்தில், 56 வீட்டுமனைகளை, அப்போதைய எம்.எல்.சி.,க்கள் சிலர் வாங்கினர். அப்போது, கோவிலுக்கென்று, சிறு இடமும் ஒதுக்கப்பட்டது. இப்பகுதி மக்களிடம், நன்கொடை வசூலித்து, 1938 ஏப்., 2ல் கோவிலுக்கான திருப்பணி துவங்கியது. நிச்சலபிரகாஷ் சுவாமிகள், கும்பாபிஷேகம் நடத்தினார்.

பின், மக்களிடம் பணம் வசூலித்து சன்னதியின், முன்புறம் கோபுரம்; நுாதன அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, கட்டடம் கட்டி, இரவு பாடசாலை நடத்தினர். 1979ல், மூலவரை வலம் வர பிரகாரமும், 1986 ஜனவரியில், விநாயகர், கருமாரி அம்மன், சத்ய நாராயணர், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று, பரணி பூஜை நடத்தப்பட்டது.
இன்று காலை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு, தேவராஜ்
குழுவினரின், தண்டு மாரியம்மன் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பகல், 12:00
மணியிலிருந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில்
தலைவர் கிருஷ்ணன், உதவி தலைவர் வேலு, பொது செயலர் ரவிசங்கர், செயலர்கள் மற்றும்
நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !