ஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்டம்!
ADDED :3819 days ago
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.அதனையொட்டி கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று இரவு 11 மணிக்கு ஸ்ரீஐயனார் சுவாமி குதிரை வாகனத்திலும், கருமியம்மன் சுவாமி கேடயத்திலும், விநாயகர் சுவாமி எலி வாகனத்திலும், காத்தவராயன் மற்றும் மாரியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்திலும் வீதியுலா நடந்தது.கடந்த 9ம் தேதி இரவு 12:30 மணிக்கு 70 அடி உயரத்தில் மகமேறு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு உச்சிமலி (எல்லைக்கு சென்று தீபாராதனை செய்தல்) வழிபாடு நடந்தது. நேற்று மதியம் 2.30 மணிக்கு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து, இழுத்தனர்.