உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களாம்பிகை கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

மங்களாம்பிகை கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை மங்களாம்பிகை கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 20ம் தேதி காலை 8.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மாலை 6:00 மணிக்கு மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பாலாங்காரம், இரவு 8:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று (21ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாத்ராதானமும் 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், 10:25 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !