முத்தாலம்மன் கோவிலில் 22ம் தேதி செடல் உற்சவம்
ADDED :5349 days ago
கடலூர் : குறிஞ்சிப்பாடி முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 22ம் தேதி நடக்கிறது. குறிஞ்சிப்பாடி அடுத்த அனுக்கம்பட்டு கிராமத்திற்குட்பட்ட முத்தியால்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 14ம் தேதி விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்து வருகிறது. வரும் 22ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. 23ம் தேதி முத்தாலம்மமன் தெப்பல் உற்சவம், மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அனுக்கம்பட்டு, முத்தியால்பேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.