உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

திருத்தணி: மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று ராகுகால பூஜை நடந்தது. இதில், பெண்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து வழிப்பட்டனர். திருத்தணி  முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில்  மத்துாரில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை ஓட்டி,  காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, பால் அபிஷேகம் நடந்தது.  இதை முன்னிட்டு, திரளான  பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து  வழிபட்டனர். தொடர்ந்து, மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை,  ராகுகாலத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில்,  திருத்தணி, மத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !