மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3733 days ago
திருத்தணி: மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று ராகுகால பூஜை நடந்தது. இதில், பெண்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து வழிப்பட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் மத்துாரில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை ஓட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை, ராகுகாலத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.