பழநிகோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு!
ADDED :3740 days ago
பழநி: கேரளாவில் ஓணம் விடுமுறையை முன்னிட்டு, பழநிகோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பழநிகோயிலுக்கு அம்மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலிலும், இடும்பன் கோயிலிலும் தரிசனம் செய்தனர்.