உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகை விழாவையொட்டி, உற்சவர் கிரிவலம் நடந்தது.மயிலத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, 4.9.15 காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி, ஏரளாமான பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளத்தில் மொட்டையடித்தும், அலகுகள் குத்தியும், மலைக்கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8 மணிக்கு மலர் அலங்காரத்தில், உற்சவர் சுவாமி கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !