அலமேலு அர்த்தம் தெரியுமா?
ADDED :3801 days ago
திருப்பதி சீனிவாசரை மணந்த லட்சுமி, திருச்சானூரில் பத்மாவதி என்னும் பெயரில் கோவில் கொண்டிருக்கிறாள். பத்மாவதி என்பதற்கு தாமரையில் பிறந்தவள் என்று பொருள். பத்மாவதியை அலமேலு மங்கை என்று சொல்வது வழக்கம். அலர் மேல் மங்கை என்பதே அலமேலு என சுருங்கி விட்டது. தாமரையை இருப்பிடமாக கொண்டவள் என்பது இதன் பொருள். அவள் மேனியில் தாமரை மணம் கமழ்வதால் பத்மகந்தி என்றும் அழைப்பர்.