இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 164வது உழவாரப்பணி!
சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல், பூஜை பொருள்கள் துலக்குதல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும்.இதுவரை 163 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.
இந்த உழவாரப்பணியில் 400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம். வருகிற 27.9.2015ம் தேதி ஞாயிறன்று தாம்பரம் - படப்பை சாலையில் உள்ள மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில் மற்றும் ஞானாம்பிகை உடனாய கைலாசநாதர் கோயிலில் 164 வது உழவாரப்பணி நடைபெற இருக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி. மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். இது தவிர வயலீஸ்வரர் கோயிலில் மாலை 4 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.
தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.