உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

பாதூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

உளுந்தூர்பேட்டை,: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்த ஜன சபாவின், 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. மறுநாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சந்திரபிரபை வாகனத்திலும், 17ம் தேதி அனுமந்தை வாகனத்திலும், 18ம் தேதி நாக வாகனத்திலும் வீதியுலா உற்சவம் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி நாச்சியார் கோலத்தில் திருப்பல்லக்கு வீதியுலா, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 20ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு யானை வாகனத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 21ம் தேதி காலை திருப்பல்லக்கு, மாலை பத்மாவதி தாயார், ஸ்ரீவெங்கடே பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் 22ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 6: 30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தேர் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி உற்சவமும், 25ம் தேதி மாலை விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !