உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்!

திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்!

திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் நேற்று திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சனம், காலை, 9:30 மணி முதல் நடந்தது. பின், மாலை, 5:30 மணிக்கு, உற்சவர் மாட வீதிகளில் உலா வந்தார்.சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை, 5:30 மணிக்கு நடந்தது. பூங்காநகர், சிவ - விஷ்ணு கோவில், ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கும், சாய்பாபா சன்னிதியில், காலை, 9:00 மணிக்கும் திருமஞ்சன அபிஷேகம் நடந்தது., அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, பெருமுடிவாக்கம் கோதண்ட ராமர் கோவில் ஆகியவற்றிலும், உற்சவருக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !