உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 12.10.15 முன்தினம் இரவு, மகாளய அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:00 மணிக்கு, ஊஞ்சல் மண்டபத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல், தாலாட்டு பாடல்களைப் பாடினர். இரவு 12: 30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன் செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர்கள் முனியப்பன், மணி  மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !