உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா!

திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தங்க கீரிடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !