திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு சாந்தாபிஷேகம்!
ADDED :3643 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. பல்வகை அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனக்காப்பு சாத்துபடியாகி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.