உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் வைபவம்!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் வைபவம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவி லில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, கலச ஆவாகனம், பஞ்சாசன பூஜை, மூலவருக்கு மகா அபிஷேக அலங்காரம், பஞ்சபிரம்ம தீப பூஜை முடிந்து, பரணி தீபம் எற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி எழுந்தருளி, சொக்கபனை ஏற்றும் வைபவம் நடந்தது. அண்ணாமலையார் தீபஜோதியாய் பக்தர்களுக்கு காட்சியளிக்கும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !