மூலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :3583 days ago
பாகூர்: பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, மூலநாதர் சுவாமிக்கு நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை 6.00 மணிக்கு, பாலவிநாயகர், வேதாம்பிகையம்மன், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜை நடத்தது. 12.00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு, 1008 சங்கு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.முன்னதாக, 1008 சங்குகளையும் சிவ லிங்க வடிவத்தில் வைத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.