லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் இன்று திருவோண தீபம்
ADDED :3584 days ago
விழுப்புரம்: ப.வில்லியனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், இன்று திருவோண தீபம் ஏற்றப்படுகிறது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவோண தீபம் ஏற்றப்படுகிறது. விழாவையொட்டி, பகல் 1:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் பெருமாள் கனகவள்ளி தாயாருடன் புஷ்பம் மற்றும் துளசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், மாலை 5:30 மணிக்கு கருட கம்பத்தில் திருவோண தீபம் ஏற்றப்படுகிறது.