அவலூர்பேட்டையில் கலச விளக்கு பூஜை
ADDED :3755 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. அவலூர்பேட்டையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணிதல் விழா நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரத்குமார் முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம், மேல்வைலாமூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை ஆகியோர், வேள்வி பூஜையை துவக்கி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி மாலை அணிந்தனர். இதில் வெண்ணிலா மணி, வசந்தி, ராணி, மகேஸ்வரி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.