உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸவம் கடந்த 1ம் தேதி துவங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவின், 10ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார்க்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தி உலா நடந்தது. 7:00 மணிக்கு ஊஞ்சலில் அருள்பாலித்தனர். 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் திவ்யபிரபந்தம் துவக்கம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.