உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டாலாபிேஷக விழா!

மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டாலாபிேஷக விழா!

திண்டுக்கல்: திண்டுக்கல், காந்திகிராமம், செட்டியபட்டி, விஜயநகரத்தில் அமைந்துள்ள மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டலாபிேஷக விழா சிறப்பாக நடந்தது. இக்கோவிலின் கும்பாபிேஷகம் கடந்த டிசம்பர் 27 ம் தேதி நடந்த நிலையில், மண்டலாபிேஷகம் ஜனவரி 13ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. கணபதி பூஜையுடன் துவங்கிய  மண்டலாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,   ஸ்ரீ மஹாலெட்சுமி குபேரர், சித்ரலேகா சுவாமிகளுக்கு கட அபிேஷகம், 108 சங்காபிேஷகம், கலசாபிேஷகம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  ஜனவரி 15ம் தேதி மஹாலட்சுமி, குபேரருக்கு காய்கறி அலங்காரம், ஜனவரி 16ம் தேதி கனி அலங்காரம், 17 ம் தேதி வளையல் அலங்காரம் நடைபெறுகிறது. பிரதிவாரம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிவரையிலான குபேர காலத்தில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 9500474731 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !