உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சிராயபாளையத்தில் ஆற்று திருவிழா உற்சவம்

கச்சிராயபாளையத்தில் ஆற்று திருவிழா உற்சவம்

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் நடந்த ஆற்று திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி, நேற்று முன்தினம் ஆற்று திருவிழா நடந்தது. விழாவில் கச்சிராயபாளையம் மற்றும் வடக்கனந்தல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், வடக்கனந்தல் அகிலாண்டேஸ்வரி சமேத உமாமகேஸ்வரர், கச்சிராயபாளையம் பாலமுருகன் ஆகிய சுவாமிகள் ஊர்வலமாக கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து தீர்த்தவாரி நடந்தது. பின்னர், கோமுகி நதிக்கரையில் எழுந்தருளி, பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவில் சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !