ஒருவரை நாலும் தெரிந்தவர் என்று கூறுவதன் பொருள் தெரியுமா?
ADDED :3675 days ago
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையே அப்படி குறிப்பிடுகிறார்கள். அறவழியில் வாழ்க்கை நடத்தி, பொருளைத்தேடி, இன்பம் பெறுவோர் இறைவனின் அருளால் வீடுபேறு என்னும் முக்திநிலையை அடைவார்கள் என்பது இதன் பொருள். திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் மூலம் பாடி முக்திக்கு வழிகாட்டுகிறார்.