கோபுரக்கலசம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பது ஏன்?
ADDED :3658 days ago
கோபுரத்தின் உயரம் மற்றும் நிலைகளைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட வேண்டியவை கலசங்கள். மூன்று நிலை, ஐந்துநிலை என கோபுரத்தின் அளவு கூடும் போது கலசங்களின் எண்ணிக்கையும் அது போன்று அமையும். இதில் ஒற்றைப்படை எதற்காக என்றால் சில விஷயங்களை சிற்ப சாஸ்திரம் இப்படித்தான் செய்ய வேண்டும் என கூறுகிறது. இதற்காக தத்துவம் என்ற பெயரில் எதையாவது சொல்வதில் அர்த்தமில்லை.