உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் மாசி விழாவில் திருக்கல்யாணம்!

பழநி மாரியம்மன் மாசி விழாவில் திருக்கல்யாணம்!

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. மாரியம்மன்கோயில் மாசித் திருவிழாவில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீர், பால் ஊற்றி வழிபட்டனர். பூவோடுவைத்து (தீச்சட்டி எடுத்தும்), மாவிளக்கு ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித கலசங்கள் வைத்து நேற்றிரவு 8.25 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணிக்குமேல் வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதஊர்வலம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. மாரியம்மன்கோயிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையும், 11 மணிக்குமேல் சக்திகரகம் அழைத்துவந்து, அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !