உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் பங்கேற்பு

அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் மலையை சுற்றி குளித்தலை, லாலாபேட்டை, முசிறி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர், நேற்று முன்தினம், பவுர்ணமி கிரவலம் வந்து சுவாமியை வழிப்பட்டனர். இதேபோல், பொருநல்லூர் அடுத்த, சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீ சுற்றளவு கொண்ட பாறையால் ஆன மலை கோவில் உள்ளது. இந்த மலை உச்சியில் ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் என்ற திரு கோவில் உள்ளது. இங்கும் பவுர்ணமி கிரவலம் நடந்தது. முன்னதாக மலை மீது உள்ள கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஆவுடைய லிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னர் மலை மீது ஏறி, ஆவுடையலிங்கேஸ்வர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !