உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா!

கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா!

திருப்பூர் : பொங்கல் விழாவையொட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று, சிறப்பு வழிபாடு  நடத்தினர். திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன், 16ல் துவங்கியது. 22ல் முளைப்பாரி, பால்குட  ஊர்வலம்; கம்பம் போடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு படைக்கல ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00க்கு,  மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா நடைபெற்றது. கோட்டை மாரியம்மன், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர்  சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள், கோவிலில் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். நேர்த்திக்கடனாக, பூவோடு தாங்கிய கம்பத்துக்கு,  மஞ்சள் நீரூற்றி, உப்பு துõவினர். இன்று காலை, 9:00 முதல், பகல் 12:00 மணி வரை, மஞ்சள் நீராட்டு விழா, நாளை அன்னதானம் நடைபெறுகிறது.  அதேபோல், இன்று, பண்ணாரி மாரியம்மன் அலங்காரம்; நாளை, மீனாட்சி அம்மன் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும்  வகையில், நாய், கால்நடைகள், தவழும் குழந்தை, கை, கால் என, மண்ணில் செய்த அவயங்கள் கோவிலில் செலுத்தப்பட்டிருந்தன. நேற்று, ஆயி ரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !