காரைக்கால் தாயிர பள்ளியில் கந்தூரி விழா
காரைக்கால்: காரைக்கால் தாயிர பள்ளியில் கந்தூரி விழாவையொட்டி நேற்று ெஷய்னுல்லாஹ் குதிரை கொடி ,ரத ஊர்வலம் நடந்தது. காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ள தாயிர பள்ளிவாசல் ஹாலத் சுல்தானுல் ஆரிப்பீன் செய்யிது அஹ்மது கபீர் ரீபாயின் வருடாந்திர கந்தூரி விழா கடந்த 9ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தன குட ஊர்லவம் நடந்தது.நள்ளிரவு 1 மணிக்கு புனித ரவுலா ஷரீப்பிற்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 4.10 மணிக்கு ெஷய்னுல்லாஹ் குதிரை ரத கொடி ஊர்வலம் நடந்தது. ஊர்வலகம் காரைக்கால் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.இரவு ெஷய்னுல்லாஹ் குதிரை கொடியோற்றம் நடந்தது.வரும் 6ம்தேதி நிகழ்ச்சிகள் முடிந்து கொடி இறக்கம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.