மதுரை மீனாட்சி கோயிலில் மார்ச் 9ல் கிரகண கால அபிஷேகம்
ADDED :3544 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 9ல் சூரியகிரகணத்தையொட்டி கிரகண கால அபிஷேகம் நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: சூரிய கிரகணம் மார்ச் 9ல் அதிகாலை 4.50 மணிக்கு துவங்கி காலை 6.44 மணிக்கு முடிகிறது. மார்ச் 8 ல் இரவு திருவனந்தல், வினா பூஜை நடந்து பங்குனி கதவுகள் சாத்தப்படும். இந்த நேரத்தில் அர்ச்சனை, சிறப்பு அனுமதி கிடையாது. மார்ச் 9ல் சூரியகிரகணத்தின் மத்திய காலமான அதிகாலை 5.48 மணிக்கு மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தம் எடுக்கப்பட்டு அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடக்கும். காலை 6.44 மணிக்கு கிரகணம் முடிந்தவுடன் கால சாந்தி பூஜைகள் முடிந்து வழக்கம் போல் தரிசனம் நடக்கும், என்றார்.