உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை, 6:00 மணி முதல், 9:00 மணிக்குள் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.அதன்பின், மாலை, வாஸ்து சாந்தியும், அங்குரார்பணமும், விநாயகர் வீதியுலாவும் நடந்தது. பின், நேற்று காலை, 10:30 மணிக்கு, கொடியேற்றமும், அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி அலங்காரம் மற்றும் வீதியுலாவும், பின், மாலை, சோமாஸ்கந்தர் சந்திரபிரபை வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !