ராஜகாளியம்மன் கோயிலில் காரடையான் நோன்பு
ADDED :3526 days ago
கன்னிவாடி: காரடையான் நோன்பை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன அபிஷேகத்துடன், வாலை, சக்தி மூலவர்களுக்கு வி÷சஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பெண்கள், திருவிளக்கு வழிபாடு செய்தனர்.