பாண்டி கோயில் தக்கார் நியமனம்
ADDED :3697 days ago
மதுரை: மதுரை பாண்டி கோயில் தக்காராக கே.செல்லத்துரை நியமிக்கப்பட்டார். அவர் கூறியதாவது: பாண்டி முனீஸ்வரர் கோயில் அறங்காவலர்களிடம் தக்கார் பொறுப்பை ஒப்படைக்க கேட்ட போது, அவர்கள் பொறுப்பை ஒப்படைக்காமல் சென்று விட்டனர். இதனால் சுயமாக பொறுப்பேற்று கொள்ளப்பட்டது. கோயிலுக்கு பணி செய்ய சென்ற போது, அங்குள்ள அலுவலக அறை பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.