மாதப்பூண்டி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
ADDED :3526 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா, மாதப்பூண்டி பாலசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு, சிறப்பு பூஜை, 11:00 மணிக்கு, சக்திவேல் ஊர்வலம், தொடர்ந்து காவடி ஊர்வலம் நடந்தது. பிற்பகல் 1:30 மணிக்கு, தீமிதியும், மஞ்சள் இடித்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல், செடல் சுற்றுதல், கொதிக்கும் எண்ணையில் வடை சுடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறை÷ வற்றினர்.