கூடலுார் செந்தில் முருகன் கோவில் விழா
ADDED :3527 days ago
கூடலுார்: கூடலுார், ஆமைகுளம் குமரன்நகர் செந்தில் முருகன் கோவிலின், நான்காம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தன. மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று, காவடி பாலித்தல், பறவை காவடி ஊர்வலம் நடக்கிறது. நாளை, திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.