உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக காலை 10:00 மணியளவில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை அரவான் பலி நிகழ்ச்சியும், 7:00 மணியளவில் தீமிதி திருவிழாவும் நடந்தது. பின்னர், பூங்கரவ ஊர்வலத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்ரமணியன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் மடவிளாகம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !