ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :3519 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே அமைந் துள்ள ஆதிவாலீஸ்வர் கோவிலில் மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை யொட்டி மாலை 3:00 மணிக்கு பிரதோஷ நாயகர் நந்தீஸ்வரருக்கு சிற ப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட நந்தீஸ்வரர் மற்றும் ஆதிவாலீஸ்வரருக்கு சி றப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு பிரதோஷ நாயகர் ஆலய உள் புறப்பாடு வீதியுலா நடந்தது. இதில், விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சிந்தாமணி வேலு கலந்து கொண்டு, தரிசனம் செய்தார்.