உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

பண்ருட்டி: திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று  அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை நடந்தது. ராமநவமியை  முன்னிட்டு, மூலவர் பெருமாள் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகன், அனுமனுடன் அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு, உற்சவர்  பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும்; 10:00 மணிக்கு, மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம் நடந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை  4:00 மணிக்கு, நடை திறப்பு, மாலை 5:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !