உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையானந்தா சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா!

குழந்தையானந்தா சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா!

மதுரை: காளவாசல் குழந்தையானந்தா சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் நேற்று(7ம் தேதி) சிறப்பாக நடந்தது. அன்று காலை 8 மணிக்கு கணபதிஹோமம் மற்றும் அதை தொடர்ந்து ஸ்ரீவித்யா ஹோமமும் நடந்தன. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தையானந்தா சுவாமியை வழிபட்டனர். அதன் பிறகு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !