போடி பரமசிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :3487 days ago
போடி: தென்திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டு 10.30 மணிக்கு இங்கு கொடியேற்றப்பட்டது. அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். தக்கார் பாலகிருஷ்ணன், செயலாளர்கள் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் ராஜாராம், ஆறுமுகம், நகராட்சி சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. சுவாமி அலங்காரம், பூஜைகளை அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம் செய்தனர். சித்திரை திருவிழா ஏப். 15 ல் துவங்கி 22 வரை நடக்கிறது.