உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா துவக்கம்

பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா துவக்கம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு தீபாராதனை நடந்தது. விழாவின் ஒவ்வொரு நாளும் வெள்ளி ரிஷப வாகனம், நந்தி, சிம்மம், குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் திருவீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப்.16ம் தேதி திருக்கல்யாணம், 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பார் முத்துகண்ணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !